சிவபெருமான்
தாழ்ந்த நீண்ட சடையுடையவன். மேகம் தவழும் முடிமேல் சந்திரனை அணிந்து கங்கையைத்
தாங்கியவன். மூன்று கண்களை உடையவன். கழுத்தில் விசக் கறை உடையவன். ஒரு கையில்
மழுப்படையும் மற்றொரு கையில் கபாலமும் ஏந்தியவன். புலித்தோல் அணிந்தவன். யானைத்
தோலைப் போர்த்திருப்பவன். இடபத்தை வாகனமாகவும் கொடியாகவும் பெற்றவன். நெற்றியில்
திருநீறு அணிந்தவன். உமாதேவியை ஒரு பாதியாகக் கொண்டவன். இமயமலையைத் தனது
இருப்பிடமாகக் கொண்டவன். இங்ஙனம் தோற்றமுடையவராய்ச் சிவபெருமான் இருக்கிறார். இவர்
தோற்றத்திற்குரியக்
காரணகளைப் பல புராணக் கதைகள் வழியாக அறிந்துகொள்ளலாம்.மேலும்,இக்கதைகள் வழியாக பல
அறக்கருத்துகளும் காணமுடிக்கிறது.
இறைவன் பிறையணிந்த புராணம்
சிவன் தனது
அழகிய சடைமுடியில் சந்திரனை அணிந்து காணப்படுவார்.இறைவன் பிறை அணிவதற்க்கு ஒரு கதை உண்டு . தக்கன் என்பான் அசுவினி முதலிய தன் இருபத்தேழு பெண்களையும்
சந்திரனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். ஆனால் சந்திரனோ உரோகிணி என்பவளிடத்து மட்டும்
மிகவும் அன்பு செலுத்தினான். இதனை தக்கன் அறிந்து சினங்கொண்டான். சந்திரனின்
கலைகள் அழிந்து போகுமாறு சபித்தான். சந்திரன் தன் பதினைந்து கலைகளும் தேயவே
சிவனிடம் அடைக்கலம் புகுந்தான். அப்பெருமான் இரங்கினார். ஒற்றை கலையோடுக் கூடிய
சந்திரனைத் தமது சடையிலணிந்தார். மீண்டும் கலைகள் வளரும்படி அருள் புரிந்தார். இப்புராணத்தின் வழி உயிர்கள் அனுபவிக்கும்
இன்பத்தை வளர்பிறையாகவும், துன்பத்தைத் தேய்பிறையாகவும்
ஒப்பிட்டுக் காணலாம்.
புலித்தோல் அணிந்த புராணம்
சிவன் அணிந்த
ஆடைக்கும் அணிகலன்களுக்கும் காரணமும் கதையும் இருக்கின்றன. அதனால் அதனையறிந்து
பின் வணங்குதல் சிறப்புடையதாகும். தாருகாவனத்து முனிவர்கள் சிவனை அழிக்கும்
பொருட்டு ஒரு வேள்வி செய்தனர்.
முனிவர்கள்
வேள்வித் தீயினின்று ஒரு புலி வெளி வந்தது. அதை சிவன் மீது ஏவினர். இறைவன் அந்தப் புலியைக் கொன்றார். அதன் தோலை
உரித்து தன் மேனி அரையில் கட்டிக் கொண்டார்.
இப்புராணத்தில் மனிதனிடம்
இருக்கும் அகங்காரம் புலிக்கு ஒப்பிடப்படுகிறது. மிருக உணர்ச்சிகளுக்கு
இடங்கொடுக்காமல் உயர்ந்த உணர்வுகளுடன் மனிதன் நடந்து கொள்ள வேண்டுமென்று
அறியமுடிகிறது.
பாம்பணிந்த புராணம்
வேள்வித்
தீயிலிருந்து பாம்புகள் தோன்றின. அவை முனிவர்களின் ஆணையால் சினத்துடன் சென்றன.
அந்தப் பாம்புகளைத் திருமாலினது கருடனுக்கு அஞ்சி முன்னமே தம்மிடம் அடைக்கலமான
பாம்புடன் ஒன்று சேர எம்பெருமான் அணிந்து கொண்டார்.
இப்புராணத்தின்
வழி சமூக கெட்ட சூழ்நிலைகள் மனிதனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டுள்ளது. அதனை
அண்டாதவாறு மனிதன் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதை அறியமுடிகிறது.
வெண்டலை அணிந்த புராணம்
பாம்புகளும்,
சிவனிடம் சரண் புகுந்ததால் வெண்டலையை ஏவினர்.
அதனை இறைவன் தம் கையினால் பற்றித் தலையில் சூடினார். இப்புராணத்தில் உலகம் அழியா வண்ணம் சிவன்
காத்தற் போல் மனிதன் உலக நலனிலும் கவனம் செலுத்த வேண்டுமென அறியப்படுகிறது.
மழு ஏந்திய புராணம்
முனிவர்கள்
வேள்வியிலிருந்து மழுவினைத் தோன்றுவித்தனர். அதனை சிவன் மீது ஏவினர். இறைவன் அதை
ஆயுதமாகத் தம் கரத்தில் ஏந்தினார்.
மனிதர்களிடம் இருக்கும் தீய
சக்திகள் நீங்க வேண்டுமென்று மழு ஏந்திய புராணத்தின் வழி அறியமுடிகிறது.
நெருப்பேற்றிய புராணம்
இறைவன் தம்
கையில் நெருப்பேந்திய வண்ணம் காணப்படுவார். தாருகாவன முனிவர்கள் ஏவிய தீயையே
ஏந்தினார். கையில் ஏந்தியவண்ணம் நடனமும் புரிந்தார். இதனை,
இதனை,நெருப்பைச் சாட்சியாக வைத்துச் சொல்வது
சத்தியம் ஆகும். இங்குச் சிவன் என்னை நம்பி வாழ்ந்தால் மரண பயமில்லை. இது
சத்தியமென மனிதர்க்குச் சிவன் கூறுவது போல் நெருப்பை கையேந்தி நிற்கிறார்.
திருவெண்ணீறு அணிந்த புராணம்
வெண்ணீறு பூசிய
சாம்பல் நிறமுடைய தோற்றத்துடன் சிவன் காணப்படுவார். இதற்கும் ஒரு புராணம் உண்டு.
சிவன் அசுரர்களின் முப்புரங்களை எரித்தார். அதில் இருந்த அசுரர் வெந்து வீழ்ந்த
நீற்றை அணிந்து கொண்டு சாம்பல் நிறத்தவர் ஆனார். இவ்வுலகத்திலுள்ள உயிருள்ள உடல்கள் யாவும் ஒரு
நாள் சாம்பலாகத் தான் போகும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்புராணம்
உணர்த்துகிறது.
குடர்நெடுமாலை அணிந்த புராணம்
சிவன் கழுத்தில்
மாலைகள் இருக்கும். அம்மாலைகள் எலும்பு முதலியவற்றைக் கோர்த்ததால் ஆனவை. அக்கினி
பிரளயக் காலத்தில் உயிர்கள் யாவும் அழிந்தன. அதில் பிரமன், திருமால் முதலிய தேவர்களும் அடங்குவர். அச்சமயத்தில் உலகம் சுடலையாய்
தூய்மை உடையதாய்த் தோன்றும். அழியாத் தன்மை பெற்ற சிவன் இறந்தவர்களின்
எலும்புகளையும் குடலையும் கோர்த்து மாலையாக அணிந்து திருக்கூத்து இயற்றுவார். சிவபெருமானே இவ்வுலகத்தில் ஆதியும் அந்தமாய்
அழியாது இருப்பவனென இப்புராணம் காட்டுகிறது.
திருநீலகண்டரான புராணம்
சிவனின்
தொண்டைப் பகுதியில் நீலநிறமாக இருப்பதற்கும் ஒரு கதையும் காரணமும் உண்டு.
திருப்பாற்கடலில் அமுதம் கடைவதற்கு மந்தர மாலையை மத்தாக வைத்து ‘வாசுகி’ என்னும் பாம்பை நாணாகக் கொண்டு தேவர்
ஒருபுறம் அசுரர் ஒருபுறம் நின்று கடைய ஆரம்பித்தனர். அப்பாற்கடலிலிருந்து திருமகள்
கலைமகள் முதலியோர் தோன்றினர். இதனை,
அக்கடைசலின்
போது ‘வாசுகி’ வருத்தம் தாங்காமல் விடத்தைக் கக்கியது. அவ்வாறு எழுந்த விடத்துக்கு
அஞ்சி பிரமன் முதலிய தேவர்கள் சிவனிடம் சரண் புகுந்தனர். சிவன் காத்தற்பொருட்டு
விடத்தை உண்டார். அனைத்துலகமும் சிவனாரின் உடலுக்குள் அடக்கம். அதனால், அவ்விடம் வயிற்றுக்குள் போவதற்கு முன்னே பார்வதி அம்மையார்
தொண்டையில் விடம் நிற்கும்படி அழுத்தினார். நின்ற அவ்விடம் நீலநிறமாக மாறியது. அது
முதல் ‘நீலகண்டர்’ என அழைக்கப்பட்டார்.
சிவன் விடம்
தொண்டைக்குக் கீழ் இறங்காமல் பாதுகாத்துக் கொள்கிறார். அது போல் கெட்ட சூழ்நிலைகள்
தன்னை அண்டாதவாறு மனிதன் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.
கங்கையணிந்த புராணம்
சிவபிரான் தன்
சடைமுடியில் கங்கை அணிந்து இருப்பார். இதற்கும் ஒரு புராணமுண்டு.
பகீரதன் மன்னன்
வடதேசத்தை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. அதனால்
அம்மன்னன் திருமால் குறித்து தவம் புரிந்தான். திருமால் அவன் வேண்டியபடி
கங்கையாற்றை வரவழைத்தார். கங்கை செருங்கோடு வந்தது. இதனால் உலகம் அழிந்துவிடுமென்ற
பயம் கொண்ட மன்னன் சிவனை வேண்டிக் கொண்டான். உலகைக் காக்க சிவன் தன் சடையை விரித்து
கங்கையைத் தாங்கினார். அதன் வேகத்தைத் தடுத்து பூவுலகில் பாயச் செய்தார்.
செருக்கோடு
மனிதன் வாழ்ந்தால் அழிவை எதிர்கொள்வான் என்ற கருத்தானது புராணம் வாயிலாகப்
பெறபடுகிறது.
யானைத்தோல் அணிந்த புராணம்
சிவன் யானைத்
தோலைப் போர்வையாகப் போர்த்திக் காணப்படுவார்.
கயமுகாசுரன்
யானை வடிவங்கொண்டு மேருமலையில் பிரம்மனை நோக்கி தவஞ்செய்தான். சிவபிரான் தவிர மற்ற
ஒருவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் யாவரும் அஞ்சும்படி யானை
வடிவில் கயமுகன் வந்தான். இதைக் கண்ட உமாதேவி அஞ்சினாள். சிவன் உக்கிர
வடிவமெடுத்து அவனை அழித்தார். யானையின் தோலை உரித்துப் போர்த்தருளினார். இதனை,
இப்புராணத்தின்
வழி யானைத் தோலை உரித்தது, மனிதனின் அகத்திலுள்ள அழுக்குகளை
நீங்கல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
இறைவிக்குச் சிவன் இடப்பாகத்தை அளித்த புராணம்
இப்புராணத்தில்
இறைவன் தனது இடப்பாகத்தை இறைவிக்கு அளித்ததை ஆராயப்படுகிறது.
பிருங்கி
முனிவர் சிவனை மட்டும் வலம் வருவதைக் கண்ட உமையம்மை சினங் கொண்டாள். சிவனை
வணங்குவோர் தம்மையும் சேர்த்து வணங்க வேண்டுமென்று கௌரி விரதம் மேற்கொண்டாள்.
விரதத்தின் மகிமையால் தேவியின் விருப்பம் போல் தனது உடம்பின் இடப்பாகத்தை ஈசன்
தேவிக்கு அளித்தார். அதனால், ஆண் பாதியாகப் பெண் பாதியாகக்
காட்சியளித்து ‘அர்த்தநாரீசுவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இப்புராணத்தின்
வழி ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை உணர்த்தும் வகையில் உள்ளது.
இடப வாகனம் பெற்ற புராணம்
வேகம் கொண்ட பல
உயிர்கள் இருக்க இடபத்தை வாகனமாக இறைவன் பெற்றதன் காரணத்தை இங்குச்
சுட்டப்பட்டுள்ளது. பிரளயக் காலம் தோன்றியது. இதனால், அனைத்துயிர்களும் இறந்தனர். தருமதேவதை அஞ்சினாள். இடபத்தினுருவை
எடுத்துக் கொண்டு சிவனிடம் அடைக்கலம் ஆயினாள். சிவன் தனது வாகனமாகக் கொண்டு
காத்தருளினார். அதுமுதல் சிவன் இடப வாகனத்தின் மேல் அமர்ந்து அடியார்க்குக் காட்சி
அளிப்பார்.
இப்புராணத்தில், பசுவின் தூய்மைபோல் மனிதன் மனம் இருத்தல் வேண்டுமென அறியப்படுகிறது.
பன்றியின் பல்லை அணிந்த புராணம்
பன்றியின்
பல்லைச் சிவன் தனது திருமார்பில் அணிந்ததை இப்புராணம் சுட்டுகிறது. திருமால் வராக
அவதாரமெடுத்து இரணியாக்கன் என்னும் அரக்கனைக் கொன்றார். அப்பன்றியுருவில் பின்னர்
வெறிகொண்டு உலகத்தைத் துன்புறுத்தலானார். தேவர்களின் வேண்டுகோள்படி சிவன் அப்பன்றியை
அடங்குமாறு அதன் கடைவாய்ப் பல்லைப் பிடுங்கி அணியாகக் கொண்டார்.
எனவே, சிவனுக்கும் மேல் எக்கடவுளரும் இல்லை என்பதை இப்புராணம் வழி உணர
முடிகிறது.
குறிப்பு :சிவனின் தோற்றத்திற்கான
காரணங்களை கந்தபுராணம் போன்ற நூல்கள்
எடுத்துரைக்கின்றது.