கடல்புறா தமிழர்களின் வீர்த்தைச் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் .இந்நூலின் கதாநாயகன் கருணாகரத் தொண்டைமான் . இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி. இவனாலே சோழன் கலிங்க நாட்டை வெற்றி பெற முடிந்தது .கலிங்கத்துப்பரணி எனும் நூல் இப்போர் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்நூல் போர் பற்றிய செய்திகளும் , முதலாம் குலோத்துங்க சோழன் பற்றிய குறிப்புகளும் தருகின்றன . இம்மன்னனைப் பற்றி அறிய விக்கிப்பீடியாவில் காணலாம்.
கடல் புறா எனும் நூலை எழுதியவர் சாண்டியல்யன் ஆவார். இவர் இந்நூல் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் விறுவிறுப்புடன் கொண்டு செல்கிறார். மேலும் ,போர் முறைகளை நுணுக்கமாகவும் கூறியுள்ளார் .தமிழர்கள் கப்பல் படையில் சிறந்து விளங்கியமையை இவர் எழுத்தால் நமக்கு புரிய வருகிறது .