நூல் பெயர் : ஆசாரக்கோவை
ஆசிரியர் பெயர் ; பெருவாயின்முள்ளியார்
நூல் வகை : இலக்கியம் (பதினெண்கீழ்க்கணக்கு)
பாடல் எண்ணிக்கை : 100
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் , நாலடியார் போன்ற நூல்கள் சிறந்த நூல்களாக விளங்குகின்றன என்பது அனைவருமே அறிந்த ஒன்று தான் . அதில் ஆசாரக்கோவையும் அடங்கும்.
இந்நூல் மக்களின் ஒழுக்க முறைகளை எடுத்துரைப்பவை. மேலும்,அடிப்படையானவற்றை எளிமையான முறையில் கூறுபவை. மறந்து விட்ட விசயங்களை நினைவூட்டும் வகையில் இன்றையக்காலங்களில் பயன்படும் நூலாக உள்ளன. உதாரணமாக,சாப்பிடும் முறை ,உட்காரும் முறை ,குளியல் முறை ,உறங்கும் முறை போன்றவற்றை பற்றி விளக்கமாக கூறும் நூல் எனலாம். .இந்நூல் மாணவர்க்கு பாட நூலாக மட்டுமின்றி திருக்குறள் போன்று சமுதாயத்திற்க்கு அடிப்படையான நூல் என்றே கூறலாம்.இந்நூல் பற்றிய படிப்பினை,
இந்நூல் கூறும் அடிப்படையானவற்றை நாம் நம் வாழ்நாளில் மேற்கொள்ளுவதன் வழியாக நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம் .