Skip to main content

ஆசாரக்கோவை கூறும் சுகாதாரம்



                 அறநூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை . இந்நூல் சுகாதாரம் சார்ந்த நூல் ஆகும். வீட்டிலும் ,பொது இடங்களிலும் மக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல் எனலாம்.அகத்தில் அழுக்கின்றி வாழ வழிகாட்டும் திருக்குறள், நாலடியார் போன்று புறத்தில் அழுக்கின்றி வாழ இந்நூல் வழிகாட்டுகிறது..இதனைப் பின்வருமாறு காணலாம்.

                                  " காட்டுக்  களைந்து  கலங்கழீஇ  யில்லத்தை"....

எனத் தொடங்கும் பாடலில் எங்ஙனம் சுத்ததோடு இருக்க வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறப்பட்டுள்ளன.


                                     
                                              காலையில் துயில் எழ வேண்டும்.
                                 

                 காலையில்  துயில்  எழுவதன் வழி,  ஆரோக்கியமும், அன்றைய  நாள்  சுறுசுறுப்புடனும்  செல்லும்.

                                             
         வீட்டையும்,அதன் சுற்றிய பகுதியும் சுத்தம் செய்தல் 

        வீட்டைச் சுத்தம் செய்த பின்பே மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி வெளிப்பகுதியும் கூட்டிச் சுத்தம் செய்து .  தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போதுதான் சிறு தூசுகள் கூட வீட்டுக்குள் நெருங்காமல் இருக்கும்.
                                         
                                                 பாத்திரங்களைத் துலக்கல் 
                                           


.       சமையல் செய்வதற்க்கு முன் எச்சில் பாத்திரங்களைச் சுத்தம் படுத்த வேண்டும் .அதுமட்டுமின்றி சமையல் செய்யும் இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.


                                                பசுவின் சிறுநீரைத் தெளித்தல் 
                                                      

வீட்டைச் சுத்தம் செய்து பின்னும் வீட்டினுள் இருக்கும் கிருமிகளை அகற்ற முடியாது.அதனால்,சமையல் செய்வதற்க்கு முன் குளித்து விட்டுப் பசுவின் சிறுநீரை ஆங்காங்கே தெளித்தல் வேண்டும் 

                                               நீர்ச்சால் மற்றும் குடத்திற்குப் பூச்சூட்டல் 


சமையல் செய்வதற்க்கு தண்ணீர் அவசியம் . அத்தண்ணீரும் சுத்தமானதாக இருக்க வேண்டும் .அக்காலத்தில் நீர் தரக்கூடிய நீர்ச்சால் மற்றும் குடத்திற்குப் பூச்சூட்டி  அவ்வப்போது கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொள்ளுவர்.இக்காலத்தில் அது இயலாது எனினும் பிடித்து  வைத்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தலாம்.

                                                          சமையல் செய்தல் 


மேற்கூறியவற்றை முடித்த பின்னரே சமையல் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் உண்ணும் உணவு  ஆரோக்கியமானதாக அமையும். 



                   சமையல் ஒழுக்கங்கள் மட்டுமின்றி செய்ய கூடாதவற்றையும் இந்நூல் ,
                    "தலையுரைத்த  எண்ணெயா லெவ்வுறுப்புந் தீண்டார்"....      

என்று தொடங்கும் வரிகளில் காணலாம்.


தலையில்  தடவிய     எண்ணெயைக் கொண்டு வேறு இடங்களில் தடவல் கூடாது. 


 தலையில் எண்ணெய் தேய்த்துப் பின் வேறு இடங்களில் தேய்த்தல் கூடாது.அவ்வாறு தேய்த்தால் தலையில் இருக்கும் அழுக்குகள் மற்ற இடங்களிலும்  படிந்து நோய் வரும்.
                    

          பிறர் அணிந்த அழுக்குத்  துணிகளைத் தொடக்கூடாது 

பிறரின் அழுக்குதுணிகள் நாம் தொடும் போது அன்னவரின் உடம்பில் உள்ள நோய்கள் நம்மை தாக்கல் கூடும்.

                       பிறர் பயன்படுத்திய செருப்புகளை அணிதல் கூடாது 

                   

 மற்றவரின் காலில் உள்ள அழுக்கு செருப்பில் படிந்து நமக்கு நோய் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதிகம் தோல் நோய்களே  ஏற்படுத்தும் .
      
                                  இங்ஙனம் சிறிய விசயங்களில் கூட பெரிய ஆபத்துகள் அடங்கிருப்பதனைக் இந்நூல் குறிப்பிடுக்கிறது.மேலும்,நீர் மாசுப்படுவதற்க்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது.
    
                     "நீராடும் போழ்தில் நெறிபட்டார்   எஞ்ஞான்றும்"..

   எனத் தொடங்கும் பாடலில் நீராடும் ஒழுக்களைக் குறிப்பிடுகிறது 

                                                               நீர்மாசுபாடு                
.


ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் ஏற்படுவதே இயல்பான விசயமாக இன்றையக் காலங்களில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்நூல் ஆற்று நீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள   நீந்தல் ,நீரில் கொப்பளித்தல் ,நீரைக் கலக்கல்,நீரில் விளையாடல் போன்றவற்றை செய்ய வேண்டாமெனச்  சாடுகிறது. 

                             இங்ஙனம் ஆசாரக்கோவை கூறும் வகையில் மனிதன் பின்பற்றினால் சமுதாயங்கள் தூய்மையாக இருக்கும்
                                 

Popular posts from this blog

சிவபெருமானின் தோற்றப் புராணம்

     

சிலப்பதிகாரக் கிளைக் கதைகள்

                                    

சிவனின் அழித்தல் புராணம்