சிறுதெய்வம் என்பது மக்களோடு வாழ்ந்து இறப்பின் போது தெய்வமாக ஏற்றுக்கொண்ட ஆத்மா ஆகும். இயேசு மற்றும் சாய்பாபா போன்ற தெய்வங்கள் கூட மனிதர்களாக இருந்தவர்களே.இருப்பினும் ,அவர்கள் மக்களுக்கு சேவை செய்து உயிர் விட்டவர்கள். ஆனால்,சிறுதெய்வங்கள் சாதாரணமான மக்களே.இருப்பினும்,அவர்கள் எங்ஙனம் மக்களால் தெய்வங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என்பதை கிராமியக்கதைகள் வழியாகவே அறியப்படும்
மாசாணி அம்மன்
நீலகிரி மலையில் ஆனைமலைக்காட்டில் தோழியர் உடன் மாசாணி ஆழியாற்றுக்கு நீராட வந்தாள். சர்வ சுதந்திரமாய் கோசர்குலப் பெண்கள் (கோசர் குலம் - மன்னர்க்கு சேவை செய்பவர் ) குளிப்பது தவறு. அப்படியிருக்க அப்பெண் மாந்தோப்பு அருகே போய் நீந்தினாள் .அது மட்டுமல்லாமல் நன்னனின் காவல் மரத்திலிருந்து மாங்காய் எடுத்து கடித்தாள். இதனைக் கண்ட நன்னனின் காவல் வீரர்கள் கர்ப்பணி பெண் என்று பாராமல் அவளை இழுத்துச் சென்றனர். மாங்காய் உண்ட குற்றத்திற்க்கு பிங்கொணாம்பாறையில் பலியிட்டனர். கோசர்கள் நன்னனை எதிர்த்து துரத்தினர் .இறந்த கர்ப்பணி பெண்னைத் தெய்வமாக வணங்கினர்.